இடையமேலூர் தவத்திரு ஸ்ரீலஸ்ரீ மாயாண்டி சித்தர் அவர்கள் இந்த பூலோகத்தில் சுமார் 950 வருடங்கள் வாழ்ந்ததாக மகான்கள், சித்தர்கள் கூறுகிறார்கள். ஐயா அவர்களின் பிறப்பு, வளர்ப்பு பற்றி யாருக்கும் எதுவும் தெரியாது. எப்படி ஈஸ்வரனுடைய அடிப்பாதமும், உச்சியும் பார்க்க முடியாமல் திருமாலும், நான்முகனும் திகைத்தார்களோ, அதேபோல மாயாண்டி சித்தர் பிறப்பு, வளர்ப்பு பற்றி யாரும் அறியவில்லை. ஆனால் மகான் மாயாண்டி சித்தர் இந்த பூலோகத்தில் 950 வருடங்களுக்கும் மேல் வாழ்ந்ததாக சதுரகிரி சித்தர், வெள்ளையங்கிரி, கொல்லிமலையில் வாழும் சித்தர்கள் கூறுகிறார்கள்.